உலகத்தமிழ் மாநாட்டுப் பரிசு :-
10-01-1968 அன்று சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புகாரில் ஒரு நாள்‘ என்னும் கவிதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்டு பொற்பதக்கம் வழங்கப்பெற்றார்.
பரிசு வழங்கியவர் : அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள்.
21-11-1975 அன்று சென்னையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் நடத்திய இலக்கியப் போட்டியில் “கொஞ்சும் குழந்தை” என்னும் நூல் குழந்தை இலக்கியத்துக்கான சிறந்த முதற் பரிசு நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.2000/- ரொக்கப் பரிசு வழங்கப் பெற்றார்.
பரிசு வழங்கியவர் : அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பரிசு :-
15-09-1991 அன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொடக்க விழாவில் ஏற்பாடு செய்திருந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் என்னும் கவிதைப் போட்டியில் முதற் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1000/- வழங்கப் பெற்றார்.
பரிசு வழங்கியவர் : அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்.